ஆந்திராவில் அண்ணா உணவகம் தொடக்கம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்

38 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன
ஆந்திராவில் அண்ணா உணவகம் தொடக்கம் - முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
x
ஆந்திராவில் 100 இடங்களில் அண்ணா உணவகங்கள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்த அம்மா உணவகங்களை போல, ஆந்திராவில் உணவகங்களை திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமராவை அம்மாநில மக்கள் 'அண்ணா' என அழைப்பது வழக்கம் என்பதால் அண்ணா உணவகம் என பெயர் சூட்டப்பட்டது. இதன்படி, நேற்று முதல்கட்டமாக, 38 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 100 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டன. விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று அண்ணா உணவக திட்டத்தை தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்