டெல்லி எக்​ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை

ஹவ்ரா மற்றும் டெல்லி இடையே செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகருக்கு வந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
டெல்லி எக்​ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை
x
ஹவ்ரா மற்றும் டெல்லி இடையே செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகருக்கு வந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, ரயில் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை நடத்தப்பட்டது. ஆனால் ரயிலில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்ததையடுத்து, ரயில் புறப்பட்டு சென்றது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை,  தொலைபேசி எண் மூலமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்