2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி

அரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி
x
* கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள், வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேறி இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்.

* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றனர் என்றார்.

* பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 
இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பதாகவும், மோடி குறிப்பிட்டார்.

* காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய ஆட்சியாளர்கள் செய்த தவறுக்காக, அவர்களில் பலர் ஜாமினில் வெளியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்