கபினியில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மீண்டும் 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கபினியில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு
x
கபினியில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மீண்டும் 15 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில், பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து,  
கர்நாடகா மாநிலம் கபினி அணைக்கு நீர் வரத்து 9  ஆயிரத்து 700 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

இதையடுத்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கபினி அணையில், தற்போது, 2 ஆயிரத்து 283 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.

இதேபோல், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 200 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து, 388 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்