"சைத்ய பூமி" ஆவணப் படம் - இயக்குநர் பா.ரஞ்சித் புதிய அறிவிப்பு

சைத்ய பூமி ஆவணப் படத்தை "நீலம்" தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார்
x
சைத்ய பூமி ஆவணப் படத்தை "நீலம்" தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து உள்ளார். சட்ட மேதை அம்பேத்கரின் நினைவிடம் சைத்ய பூமி என அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தாதர் பகுதியில் அம்பேத்கரின் நினைவிடம் உள்ள நிலையில், இது தொடர்பான ஆவணப் படம் ஒன்றை சைத்ய பூமி என்ற பெயரில், பிரபல ஆவணப் பட இயக்குநர் சோம்நாத் வாக்மேர் இயக்க உள்ளார். இந்நிலையில், இந்த ஆவணப் படத்தை "நீலம்" தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறி, டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பா.ரஞ்சித் பகிர்ந்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்