தடைகளை கடந்து வெளியான 'மாநாடு'

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது.
தடைகளை கடந்து வெளியான மாநாடு
x
பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை மீண்டும் தள்ளிவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். ஆனால், இரவு 10 மணியளவில், படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலையிலேயே திரையரங்கு முன்பு ரசிகர்கள் கூட தொடங்கிய நிலையில், காலை 5 மணிக்கு முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, இறுதியாக இன்று காலை 8 மணிக்கு மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதனால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்