ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர்

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : வருத்தம் தெரிவித்த ஜெய் பீம் இயக்குனர்
x
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என்று கூறியுள்ளார்.ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை என்றும்,1995ஆம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டர் படத்தை காட்ட வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமும் அல்ல,சில விநாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் படம் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை என்று கூறியுள்ளார்.பெரிய திரையில் படத்தை பார்த்த போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட படம் வெளியாகும் முன்பே அதை மாற்றியிருப்போம் என்றும், நவம்பர் 1ஆம் தேதி படம் வெளிவந்ததும் காலண்டர் படம் பற்றி அறிந்தவுடன் அதை மாற்ற முயற்சி மேற்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.யாரும் கேட்பதற்கு முன்பே காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்பது புரியும் என்று நம்பினேன் என்றும்,ஜெய் பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,இயக்குனராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துரதிருஷ்டவசமானது என்றும் இயக்குநர் ஞானவேல் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்