"ஜெய் பீம்"-க்கு பார்த்திபன் பாராட்டு; "சூர்யா,ஜோதிகாவை வணங்குகிறேன்" - ட்விட்டர் பதிவில் பார்த்திபன் உருக்கம்

சினிமா மூலம் சமூகத்திற்கு கோடான கோடி நன்மைகள் செய்திருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரை மானசீகமாக வணங்குவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஜெய் பீம்-க்கு பார்த்திபன் பாராட்டு; சூர்யா,ஜோதிகாவை வணங்குகிறேன் - ட்விட்டர் பதிவில் பார்த்திபன் உருக்கம்
x
சினிமா மூலம் சமூகத்திற்கு கோடான கோடி நன்மைகள் செய்திருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரை மானசீகமாக வணங்குவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இருளர் இன மக்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி இருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தைப் பார்த்து கரைந்து போனதாய் உருக்கமாகத் தெரிவித்துள்ள பார்த்திபன், நீதிபதி சந்துரு என்ற பெயர் நீதி என்ற பதத்தின் மொழிபெயர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இயக்குநர் ஞானவேலையும்  வெகுவாக தனது பதிவில் பாராட்டி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்