நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போலீஸில் புகார்
நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
நடிகர் சிம்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2016 ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த 'அன்பானவன்''அசராதவன்' 'அடங்காதவன்' என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டதாகவும், அப்போது தம்மிடம் படம் நஷ்டமடைந்தால் தான் இலவசமாக ஒரு படம் நடித்து கொடுப்பேன் என சிம்பு வாக்குறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தன்னை இதுவரையில் நடிகர் சிம்பு ஏமாற்றி வருவதால் தமக்கு 15 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.
Next Story