மலையாள நடிகர் நெடுமுடி வேணு இறப்பு - திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல் நல பாதிப்பால் காலமானார்.
மலையாள நடிகர் நெடுமுடி வேணு இறப்பு - திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்
x
மலையாளம் மற்றும் தமிழில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நெடுமுடி வேணு, பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன். ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். 2 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 6 கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்று அசத்தியவர் நெடுமுடி வேணு. பத்திரிகையாளராகவும் இணை ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், நாடகத் துறையில் தீவிரமாக செயல்பட்டார். ஆயிரத்து 980களில் இயக்குநர்கள் அரவிந்தன், பத்மராஜன் மற்றும் பரத் கோபி ஆகியோருடன் நெடுமுடி நெருக்கமாக பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிய நெடுமுடி பின்னர் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்தார். வயிற்று வலி காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நெடுமுடி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்