"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு

"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு
x
"கணவன், மனைவி உறவில் இருந்து பிரிவு" - நடிகை சமந்தா அறிவிப்பு

தனது கணவர் நாக சைதன்யாவுடனான திருமண உறவில் இருந்து பிரிய உள்ளதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து 2017ஆம் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இது குறித்து நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது பதிவில், கணவன், மனைவி உறவில் இருந்து பிரிய உள்ளதாகவும், அதேநேரம் நண்பர்களாக தொடர்ந்து பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நடிகர் நாக சைதன்யாவும் இந்த தகவலை உறுதி செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்