ஆபாச படம் எடுத்தது தொடர்பான வழக்கு - ராஜ்குந்த்ரா மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆபாச படம் தொடர்பான வழக்கில் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது மும்பை போலீசார் 1500 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஆபாச படம் எடுத்தது தொடர்பான வழக்கு  - ராஜ்குந்த்ரா மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்
x
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ராஜ் குந்த்ரா மீது 1500 பக்க குற்றப்பத்திரிகையை மும்பை குற்றப்பிரிவு போலீசார், எஸ்ப்ளனேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்த குற்றப்பத்திரிகையில், ஷில்பா ஷெட்டி, நடிகர்கள் ஷெர்லின் சோப்ாரா, செஜல் ஷா, மாடல்கள் மற்றும் ராஜ் குந்தராவின் நிறுவன ஊழியர்கள் உட்பட 43 சாட்சிகளின் அறிக்கைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேடப்படும் இரண்டு குற்றவாளிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது... 


Next Story

மேலும் செய்திகள்