"கோடியில் ஒருவன்; படம் சிறப்பாக வந்துள்ளது - மக்களுக்கு பிடிக்கும்" - விஜய் ஆண்டனி பேச்சு

இசைஞானி இளையராஜாவை முன்னோடியாக கொண்டு இசையமைக்க வந்ததாக விஜய் ஆண்டனி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கோடியில் ஒருவன்; படம் சிறப்பாக வந்துள்ளது - மக்களுக்கு பிடிக்கும் - விஜய் ஆண்டனி பேச்சு
x
இசைஞானி இளையராஜாவை முன்னோடியாக கொண்டு இசையமைக்க வந்ததாக விஜய் ஆண்டனி பெருமிதம் தெரிவித்துள்ளார். செந்தூர் பிலிம் தயாரிப்பில், விஜய் ஆண்டனி-ஆத்மிகா நடிப்பில் உருவான கோடியில் ஒருவன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, நடிகை ஆத்மிகா, தனக்கு பிடித்த நடிகை என புகழாரம் சூட்டினார். படத்தின் பைனல் வெர்ஷனை பார்த்தேன், அது மக்களுக்கு பிடிக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்ற விஜய் ஆண்டனி, இயக்கம், இசையமைப்பு ஆகியவை சிறப்பாக வந்துள்ளது என்றார். மேலும், இளையராஜா தனது முன்னோடி என்றும் அவர் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்