ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி, மருத்துவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
x
தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததாக கூறி, மருத்துவருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வரும் நடிகையும், மாடல் அழகியுமான ரைசா, முகப்பொலிவு சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றை அணுகியுள்ளார். அங்கிருந்த மருத்துவர் பைரவி செந்திலின் உத்தரவாதத்தின் அடிப்படையில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி முகப்பொலிவு சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், சிகிச்சைக்கு பின் வலது கண் மற்றும் கன்னத்தில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியதாக ரைசா தெரிவித்துள்ளார். இதற்கு மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை தராவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர வேண்டியிருக்கும் எனவும், ரைசா தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்