தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் தமிழில் தலைவி என்ற பெயரிலே இயக்குனர் ஏ.எல்.விஜய் திரைப்படமாக எடுத்து வருகிறார். அதேபோல் இந்தியில் ஜெயா என்ற பெயரில் ஹைதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் மற்றும் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர். மேலும்,  ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தொடரை  இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும்  தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, மேற்கண்ட படங்களுக்கு தடை விதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்