அந்நியன் - திரைப்பட விவகாரம் - இயக்குநர் ஷங்கருக்கு,ரவிச்சந்திரன் நோட்டீஸ்

அந்நியன் பட விவகாரம் தொடர்பாக, பிரபல இயக்குநர் ஷங்கருக்கு, படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
x
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்தை, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இயக்க உள்ளதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்தார். இது குறித்து ஷங்கருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்,  அந்நியன் படத்தின் முழு உரிமையையும் பிரபல எழுத்தாளர் சுஜாதாவிடம் பெற்றுள்ள நிலையில், தம்மிடம் பெறவில்லை என புகார் கூறியுள்ளார். இதனை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக சட்டபூர்வ நடவடிக்கையை தாம் எடுக்க போவதாக இயக்குனர் ஷங்கருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விடுத்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உரிய அனுமதி பெறவில்லை என்றும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நோட்டீசில், குற்றஞ்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்