நடிகர் விஷாலின் 'சக்ரா' படத்திற்கு தடை
நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகர் விஷால் தயாரித்து, நடித்துள்ள சக்ரா படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருந்தது. இந்நிலையில், தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கியதாக இயக்குனர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. து தொடர்பாக டிரைடண்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு பிப்ரவரி 18ம் தேதி பதிலளிக்கும்படி, நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தன் ஆகியோருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Next Story