சிலம்பரசனுடன் இணைந்த கௌதம் மேனன்

நடிகர் சிலம்பரசனும் - இயக்குநர் கவுதம் மேனனும் மீண்டும் கைகோர்த்துள்ளது, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
சிலம்பரசனுடன் இணைந்த கௌதம் மேனன்
x
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் காணும் போதெல்லாம் ரசிகர்கள் உற்சாகமடைகின்றனர். 

சிலம்பரசனை வைத்து இப்படியும் படம் எடுக்கலாம் என கவுதம் மேனன் ஒரு வழியை காட்ட, படத்தில் கார்த்திக்காக வாழ்ந்து இருப்பார் சிலம்பரசன்.

கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி பற்றி மீண்டும் பேச காரணம், வேல்ஸ் நிறுவனம் வியாழக் கிழமை இரவு வெளியிட்ட மெகா அறிவிப்புதான்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த சிம்பு - கவுதம் மேனன் கூட்டணி, மீண்டும் இணைவதாக அந்த நிறுவனம் அறிவித்ததில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துவிட்டது. 

இவர்கள் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும், இன்னமும் இந்த கூட்டணி மீது ஒரு ஈர்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அது கடந்த வருடம் வெளியான கார்த்தி டயல் செய்த எண் என்ற குறும்படத்திலும் உணரப்பட்டது. 

அச்சம் என்பது மடமையடா படத்தில் இருந்த சிலம்பரசனுக்கும், தற்போது அப்கிரேடாகியுள்ள சிலம்பரசனுக்கும் வித்தியாசங்கள் பல. 

உடல் பருமனை குறைத்தது மட்டுமல்ல, தொழில் ரீதியிலும் தன்னை மாற்றியுள்ளார். 

"அவர் படமா நிச்சயம் லேட்டாகும்" என இருந்த கதையை எல்லாம், ஈஸ்வரன் படப்பிடிப்பு மூலம் மாற்றி எழுதிவிட்டார். 

மாநாடு படத்தில் மாஸாக கவனத்தை செலுத்தி வரும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் படு பிஷியாகிவிட்டார். 

ஆனாலும் "ஏதோ ஒன்று மிஸ் ஆகுதே" என்ற நினைக்கையில்தான் சரியான நேரத்தில் கைகோர்த்துள்ளார் கவுதம் மேனன். 

Next Story

மேலும் செய்திகள்