இந்தியாவின் 51-வது சர்வதேச திரைப்பட விழா - விழாவின் நடுவர்கள் பெயர் அறிவிப்பு
இந்தியாவின் 51-வது சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாப்லோ சீசரிஸ் நடுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜென்டினா திரைப்பட இயக்குனரான இவர்,
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பல திரைப்படங்களை எடுத்துள்ளார்.
இலங்கை திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகீஸ்சும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர், இலங்கை சினிமாவின் மூன்றாம் தலைமுறையின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுகிறார்.
மூன்றாவதாக அறிவிக்கப்பட்டவர், இயக்குநர் அபுபக்கர் ஷாக்கி, இவர் ஒரு எகிப்திய-ஆஸ்திரிய எழுத்தாளராவார்.
ரூபாயத் ஹொசைனிஸ், பங்களாதேஷ் திரைப்பட இயக்குனரான இவர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராவார். இவரது பல படங்கள் அங்கு பேசு பொருளானது.
இந்திய திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷனியும் இந்தக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய மொழிகளில் 95 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
Next Story