"இளையராஜாவை நிபந்தனைகளுடன் அனுமதிக்க தயார்" - பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் நீதிமன்றத்தில் பதில்

இசையமைப்பாளர் இளையராஜவை நிபந்தனைகளுடன் ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜாவை நிபந்தனைகளுடன் அனுமதிக்க தயார் - பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் நீதிமன்றத்தில் பதில்
x
இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம்  தெரிவித்திருந்தது. இந்த இட உரிமை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோ-வில் உள்ள தனக்கு சொந்தமான இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், பிரசாத் ஸ்டுடியோ பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. 
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவை நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க தயார் என ஸ்டூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தனது பெயரில் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் பிரமான மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிராசாத் ஸ்டுடியோவின் நிபந்தனைகளை ஏற்று உயர்நீதிமன்றத்தில் பிரமான மனு தாக்கல் செய்வதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்