"எந்திரன்" திரைப்பட கதை விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் இயக்குனர் ஷங்கர் மனு
கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "எந்திரன்" திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "எந்திரன்" திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க இயக்குனர் ஷங்கர் வைத்திருந்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story