மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
மீரா மிதுன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
x
அழகி போட்டிக்கான நிறுவனம் நடத்தி வரும் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர்,  நடிகை மீரா மிதுன் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் எம்கேபி நகர் காவல் துறையினர் பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, நடிகை சனம் ஷெட்டி, நடிகை ஷாலு ஷம்மு உள்ளிட்டவர்கள் மீரா மிதுன் மீது காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்