எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்" - மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5 ந்தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் எக்மோ உள்ளிட்ட மருத்துவ கருவிகள் மூலம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையை மருத்துவ வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்