"அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாதவர்" - அப்துல் கலாமின் பெருமை - வைரமுத்து புகழாரம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டி, கவிஞர் வைரமுத்து, கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாதவர் - அப்துல் கலாமின் பெருமை - வைரமுத்து புகழாரம்
x
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு  புகழாரம் சூட்டி, கவிஞர் வைரமுத்து, கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், கடல் மீன் அளந்த குடும்பத்தில் விண்மீன் அளந்ததும், ராமேஸ்வரத்தின் சந்தில் இருந்து பால் வீதிவரை பயணமுற்றதும், இந்தியாவின் பெரிய வீட்டில் பிரம்மச்சாரியாய் தனிமை காத்ததும் பெருமையல்ல என குறிப்பிட்டுள்ளார். அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என்றும், அது தான் அவரின் பெருமை எனவும், தமது கவிதையில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்