"மத நம்பிக்கையில் அவரவர் எல்லையில் நின்று கொள்ள வேண்டும்" - ராஜ்கிரண்

மத நம்பிக்கையில் அவரவர் எல்லையில் நின்று கொள்ள வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.
மத நம்பிக்கையில் அவரவர் எல்லையில் நின்று கொள்ள வேண்டும் - ராஜ்கிரண்
x
மத நம்பிக்கையில் அவரவர் எல்லையில் நின்று கொள்ள வேண்டும் என நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார். இறைவனை நம்பாதோர்க்கு 'நம்பாமை' அவர்களின் சுதந்திரம் என்றும், அவரவர் எல்லையோடு நின்று கொள்வது தான் மேன்மையானது என நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். கந்தர் சஷ்டி கவசம் குறித்த பிரச்சினை கிளம்பியிருக்கும் சூழலில், அதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது அவனது சுதந்திரம் என்றும், முருகப்பெருமானை நம்புவோர்க்கு, கந்தர் சஷ்டி கவசம் என்பது,
ஒரு பாதுகாப்பு அரண் எனவும் தெரிவித்துள்ளார். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவ ரீதியான ஆத்ம பலன்கள் இருப்பதாகவும், இறைவனை நம்பாதோர்க்கு, "நம்பாமை" என்பது,  அவர்களின் சுதந்திரம் எனவும், அதேநேரம் நம்பிக்கை கொண்டோர்க்கு, "நம்புதல்" என்பது,
அவர்களின் சுதந்திரம் எனவும் தெரிவித்துள்ளார். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது என்றும், 

தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது,
மிகவும் கீழ்மையானது என்றும் ராஜ்கிரண் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில்,
யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்