கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.
கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்
x
கொரோனா ஊரடங்கால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படிப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் திரைப்படத்துரையை சார்ந்தவர்கள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு, அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சென்னையில் சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. நடிகர்களுக்கு கிருமி நாசினி கையுறை மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் மூலம் நடிகர்கள், படப்பிடிப்பு தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலையை அளவீடு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தளங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க  ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்