சாத்தான்குளம் சம்பவம் : நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் - நடிகர் சூர்யா
சாத்தான் குளம் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணைபோனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலைநிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடு பொதுமக்களில் ஒருவனாக தாமும் காத்திருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தியது காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார். போலீசாரின் தாக்குதலுக்கு ஆளான தந்தை, மகனை பரிசோதனை செய்த அரசு மருத்துவர், அவர்கள் நலமாக இருப்பதாக சான்றிதழ் அளித்துள்ளார் என அவர் குறைகூறி உள்ளார்.
தங்களின் மரணத்தின் மூலம் தந்தையும், மகனும் இந்த சுமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருப்பதாக அவர், குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துவது நீதிகிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா யுத்தத்தில் முன்களப்பணியாளர்களாக நிற்கும் காவல்துறையினருக்கு, தாம் தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு கண்டனமும் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story