"சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள்" - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதை போல சினிமா பட‌பிடிப்பிற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இயக்குநர் பாரதிராஜா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சினிமா பட‌ப்பிடிப்பிற்கும் அனுமதி அளியுங்கள் - முதலமைச்சருக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்
x
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடித‌த்தை, படிப்படியாக அன்றாட வாழ்வை மீட்டுகொண்டிருக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டுகளுடன் தொடங்கியுள்ளார். விதிகள் தளர்த்தி சின்னத்திரை பட‌ப்பிடிப்பிற்கு அனுமதி அளித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கடித‌த்தில் கூறியுள்ள பாரதிராஜா, சினிமா முடங்கி போய் கிடப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் திணறி வருகின்றனர், பலர் உணவுக்கே வழியின்றி சிரம படுகின்றனர், முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்டமுடியாமல் திகைக்கின்றனர் என்பது இயக்குநர் பாரதிராஜா எழுதிய கடித‌த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சினிமா படபிடிப்பிற்கும், அனுமதி அளிக்குமாறு கோரியுள்ள பாரதி ராஜா, அரசு வரையறுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடிப்போம் எனவும் உறுதி அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்