கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதி அறிவிப்பு

கொரோனா நிவாரணமாக, 3 கோடி ரூபாய் வழங்குவதாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதி அறிவிப்பு
x
கொரோனா நிவாரணமாக, 3 கோடி ரூபாய் வழங்குவதாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக தலா 50 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சிக்கு 50 லட்சம் ரூபாய், நடன சங்கத்துக்கு 50 லட்சம் ரூபாயும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரணத்துக்கு 25 லட்சம் ரூபாயும், தாம் பிறந்த ராயபுரம் மற்றும் தேசிய நகர் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி மக்களின் நலனுக்காக 75 லட்சம் ரூபாயும் வழங்க உள்ளதாகவும், நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்