பெப்சி ஊழியர்களுக்கு திரையுலகினர் பலர் நிதி உதவி

ஆர்.கே.செல்வமணி கோரிக்கையை ஏற்று திரையுலகினர் பலர் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
பெப்சி ஊழியர்களுக்கு திரையுலகினர் பலர் நிதி உதவி
x
ஆர்.கே.செல்வமணி கோரிக்கையை ஏற்று திரையுலகினர் பலர் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இழந்து நிற்கும் தொழிலாளர்களுக்கு உதவிடுமாறு இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து நடிகர் சூர்யா, அவரது த‌ந்தை சிவக்குமார், மற்றும் கார்த்தி ஆகியோர் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். நடிகர் பார்த்திபன், 25 கிலோ எடை கொண்ட 250 மூடை அரசியும், இயக்குநர் மனோபாலா 10 மூடை அரிசியும் வழங்கினர். 

பெப்சி தொழிலாளர்ளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை இழந்து நிற்கும் பெப்சி ஊழியர்களுக்கு அவர் இந்த நிதி உதவியை வழங்கியுள்ளார். தொடர்ந்து திரையுலகினர் பலரும் தங்களால் முடிந்த நிதி மற்றும் பொருள் உதவி செய்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்