பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி" - நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு
பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு சர்ச்சையாகி வரும் நிலையில், யார் மனமும் நோகும்படி பேசுபவர் அல்ல ரஜினி என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த ரஜினியின் பேச்சு சர்ச்சையாகி வரும் நிலையில், யார் மனமும் நோகும்படி பேசுபவர் அல்ல ரஜினி என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், அப்படி பேசக்கூடியவர் என்றால், 2006ஆம் ஆண்டு பெரியாரின் கருத்துக்களை தாங்கி வேலு பிரபாகரன் எடுத்த படத்தை வெளியிட எதற்காக நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் நடிகர் ரஜினி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story