நடிகை ஜெயஸ்ரீ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
நடிகை ஜெயஸ்ரீ தமக்கு மிரட்டல்கள் வருவதாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் நடிகை ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர் கொடுமைப்படுத்துவதாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சின்னத்திரை நடிகரான ஈஸ்வரை கைது செய்தனர். இந்நிலையில் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக நடிகை ஜெயஸ்ரீ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகளுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், திருமணத்திற்குப் பிறகு குடிப்பழக்கம், கஞ்சா போன்ற போதைப் பழக்கம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றில் அதிகமாக ஈடுபட்டதாகவும் ஜெயஸ்ரீ புகார் தெரிவித்துள்ளார். தன்னிடமிருந்து அபகரித்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை மீட்டுத் தரவும் நடிகை ஜெயஸ்ரீ கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story