'பிகில்' படத்துக்கு தடை கோரி வழக்கு

'பிகில்' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு
x
'பிகில' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, இந்த படத்தின் கதை தன்னுடையது என கூறி, இயக்குனர் செல்வா  சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது காப்புரிமை சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கை திரும்ப பெற்ற செல்வா, படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய, படதயாரிப்பு நிறுவனம் மற்றும் அட்லீ தரப்புக்குக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக். 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்