பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக புகார் : நடிகர் சங்கத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சங்கம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அமர்வு, நடிகர் சங்கம் கட்டப்படும் நிலத்தில் சாலை செல்வதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Next Story