நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு - ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு

நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 30ஆம் தேதிக்கு மதுரை நடுவர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
நடிகர் தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி வழக்கு - ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைப்பு
x
நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கை அடுத்த மாதம் 30ஆம் தேதிக்கு மதுரை நடுவர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தமது மகன் என்று உரிமை கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் போது  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கதிரேசன் சார்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது இந்த வழக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு மதுரை 6 வது நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்