இயக்குனர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு தடை

இயக்குனர் பாரதிராஜாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இயக்குனர் பாரதிராஜா மீதான வழக்கு விசாரணைக்கு தடை
x
இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், பாரதிராஜா மீது வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின்  விசாரணைக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரதிராஜா, மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்