மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது புகார்

மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது, அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் அளித்த புகார் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியை தெலுங்கானா போலீசார் நாடியுள்ளனர்.
மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது புகார்
x
மகளை கடத்தியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது, அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ் அளித்த புகார் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியை தெலுங்கானா போலீசார் நாடியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கு சென்ற மகளை கடத்தி சென்று விட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக வனிதா விஜயகுமாரை தெலுங்கானா போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தெலுங்கானா போலீசாருடன் ஆனந்த ராஜ் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார். இதுசம்பந்தமாக இன்று விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து அவர் திரும்பிச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்