பிரதமர் மோடியின் பக்தரால் ஏற்பட்ட அனுபவம் - நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டரில் வேதனை
பிரதமர் மோடியின் அபிமானியால் ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தமது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் தமது குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். குல்மார்க் பகுதியில் பிரகாஷ் ராஜ் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். அப்போது பெண் ஒருவர் தனது மகளுடன் ஓடி வந்து பிரகாஷ் ராஜூடன் செல்பி எடுத்துள்ளார். இதை அருகில் இருந்து பார்த்த பெண்னிண் கணவர் மோடியை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜூடனா புகைப்படம் எடுத்தாய்? என கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அழத் தொடங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் ராஜ், அந்த நபரை அழைத்து தம்மையும் மோடியையும் முன்னிறுத்தியா தாங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்றும் பெண்களை திட்டுவது தவறு என்றும் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அந்த கணவர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை பிரகாஷ் ராஜ் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
Next Story