இளையராஜா - எஸ்.பி. பாலசுப்ரமணியம் சந்திப்பு

இசை ஜாம்பவான்களான இளையராஜா எஸ்.பி. பாலசுப்ரமணியம் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இளையராஜா - எஸ்.பி. பாலசுப்ரமணியம் சந்திப்பு
x
இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா வரும் ஜூன் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி  நடக்கிறது. இதில் சில ஆண்டுகளாக பாடல் ராயல்டி பிரச்சினையால் பேசாமலும், இளையராஜாவின் கச்சேரிகளில் பாடாமலும் இருந்து வந்த எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் பாடுகிறார்.இதில் எஸ்.பி.பி மட்டுமல்லாது, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணிப் பாடகர்களும் பங்கேற்க உள்ளனர். இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மீண்டும் இணைந்து இளைய நிலாவைப் பொழியும் இந்த நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா ஆகியோரது சந்திப்பு இன்று நடந்தது. இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையும்  வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்