பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து
பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி
x
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின்  நிர்வாகிகள் தேர்தல் இன்று  நடைபெற்றது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணியும்,செயலாளராக  சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்கே.செல்வமணி, பல ஆண்டுகளாக பாடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்