"பெண்களை கேலிப் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள்" - நடிகை ரகுல்ப்ரீத்சிங் ஆவேச பதிவு...

'பெண்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்' என்று, நடிகை ரகுல் பிரீத் சிங், ஆவேசமாக சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பெண்களை கேலிப் பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள் - நடிகை ரகுல்ப்ரீத்சிங் ஆவேச பதிவு...
x
'பெண்களைக் கேலிப் பொருளாகப் பார்ப்பதை நிறுத்துங்கள்' என்று, நடிகை ரகுல் பிரீத் சிங், ஆவேசமாக சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் காரிலிருந்து இறங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தவருக்கு, அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள நடிகை ரகுல்பிரீத் சிங், ''பெண்ணை கேலிப்பொருளாக பார்ப்பதை நிறுத்துங்கள் என்றும், ஆபாசமான மனநிலை கொண்டவர்களுக்கும், அவரின் கருத்துக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். 'அடுத்தவரைப் பற்றி அவதூறாக பேசக்கூடாது என்பதற்காக தான் அம்மா குறித்து பதிவிட்டுள்ளேன் என்றும், அந்த அம்மா அவரை இந்நேரம் அறைந்திருப்பார்' என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்