கல்லூரி மாணவிகளை பாடகியாக்கும் இளையராஜா

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 9 பேரை தன் இசையில் இளையராஜா பாட வைக்க உள்ளார்.
கல்லூரி மாணவிகளை பாடகியாக்கும் இளையராஜா
x
சென்னை மகளிர் கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று மாணவிகளின் கேள்விகளுக்கு இளையராஜா உற்சாகமாக பதில் அளித்த இளையராஜா கலந்து கொண்டார். அப்போது மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் உற்சாகமாக பதில் அளித்திருந்தார். அப்போது அவரிடம் பேசிய மாணவிகள் சிலர் தங்களுக்கு பாடல் பாட விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். அவ்வாறு கூறியவர்கள் சிலரை வரவழைத்து குரல் சோதனை செய்த இளையராஜா, பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்தார். அவர்களை அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகப்படுத்த உள்ளதாக வெளியான தகவலால் மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்