தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் கோலாகலம்

இத்தாலியில் உள்ள லேக் கோமா பகுதியில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகையில் திருமணம் நடைபெற்றது.
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் கோலாகலம்
x
திருமணத்தில் பங்கேற்பதற்காக இருவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். கொங்கணி மற்றும் பஞ்சாப் முறைப்படி திருமணம் 
நடைபெற்ற நிலையில், தீபிகா படுகோனே சார்பில் வரும் 21-ம் தேதி பெங்களூருவில் வரவேற்பு நிகழ்ச்சியும், அதன் பின் ரன்வீர், தீபிகா இருவரும் இணைந்து திரையுலகப் பிரமுகர்களுக்காக டிசம்பர் 1-ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தவுள்ளனர். உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்து கொண்ட நடிகைகள் ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், அனுஷ்கா சர்மா ஆகியோரது வரிசையில் தற்போது தீபிகா படுகோனேவும் இணைந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்