"ஏ.ஆர்.முருகதாசை 27ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது" - உயர்நீதிமன்றம் உத்தரவு
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை 27ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகதாஸ் தாக்கல் செய்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருகதாஸ் மீதான புகாரின் மீது ஆரம்ப கட்ட விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முருகதாசை 27ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டார். இந்த புகார் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முருகதாசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Next Story