அக்.31 வரை நடிகர் சிம்புவுக்கு கெடு..!

அரசன் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து வருகிற 31க்குள் உத்தரவாதம் செலுத்தா விட்டால் நடிகர் சிம்புவின் உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்.31 வரை நடிகர் சிம்புவுக்கு கெடு..!
x
கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் படம் தயாரிக்க திட்டமிட்ட நிறுவனம் அதற்காக 50 லட்ச ரூபாயை சிம்புவுக்கு வழங்கியது. ஆனால் சிம்பு படத்தில் நடிக்காத காரணத்தால் முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு , விசாரணைக்கு வந்தது. அப்போது முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து 85 லட்ச ரூபாய்க்கான உத்தரவாதம் செலுத்த மேலும் அவகாசம் வழங்க வேண்டுமென சிம்பு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். உத்தரவாதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஜப்தி செய்யவும்  நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்