சின்னத்திரை நடிகை நிலானியின் காதலர் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டைக் கண்டித்து காவலர் சீருடையில் போலீசாருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு கைதானவர் நடிகை நிலானி.
சின்னத்திரை நடிகை நிலானியின் காதலர் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை
x
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டைக் கண்டித்து காவலர் சீருடையில் போலீசாருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு கைதானவர் நடிகை நிலானி. இவர், திருமணம் செய்து கொள்ளும்படி தன் காதலன் காந்தி லலித் குமார் தன்னை வற்புறுத்தி வன்முறையில் ஈடுபடுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

நிலானியின் புகாரால் மனமுடைந்த அவரின் காதலன் காந்தி லலித்குமார் சென்னை - கலைஞர் கருணாநிதி நகர் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலானியின் காதலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்