"சில நாட்கள் பொறுத்திருங்கள்.." - காங்கிரஸ் தலைவர் கார்கே சொன்ன விஷயம்

x

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முதலில் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரதமர் படித்தால்தான், அதன் மீது தாங்கள் விவாதம் நடத்த முடியும் என்றார். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர் யார், எப்போது அறிவிக்கப்படுவார்கள் என செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கார்கே, இன்னும் சில நாட்கள் பொறுத்திருங்கள் என்றார். அமேதி, ரேபரேலி தொகுதிகளின் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம், இன்று இரவு நடைபெற உள்ளது. இதில், பிரியங்கா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்