"டன் டன்னாக கறி விருந்து.. எந்த ஒரு சண்டையும் வராது.. இப்படி ஒரு விழா எங்கேயும் கிடையாது"

x

"டன் டன்னாக கறி விருந்து.. எந்த ஒரு சண்டையும் வராது.. இப்படி ஒரு விழா எங்கேயும் கிடையாது" - வியக்க வைக்கும் ஆண்கள் விருந்து விழா!

சிவகங்கையில் கண்மாய் மடையை தெய்வமாக வழிபட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது...

விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கண்மாயில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் மடையே திருமலை கிராம மக்களின் கருப்பண சாமி... ஆண்டுதோறும் மடைக்கு கிடா வெட்டி திருவிழா நடத்துவது வழக்கம்... அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராமமே விழாகோலம் பூண்ட நிலையில், விவசாயம் செழிக்க... குடும்பம் தழைத்தோங்க... தீய சக்திகள் அகல... பக்தர்கள் வேண்டுதலுக்காக வழங்கிய அரிவாள்களால்

மடை முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது...


Next Story

மேலும் செய்திகள்