வெயிலிருந்து தப்பிக்க சூப்பர் ஸ்பாட்..! - மக்களால் அலைமோதும் பிச்சாவரம்

x

தேர்தல் விதிமுறைகளால் வெறிச்சோடி காணப்பட்ட பிச்சாவரம் சுற்றுலா மையம், சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, தற்போது கோடைவிடுமுறையால் களைகட்டியுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு, தேர்தல் விதிமுறைகள் நடத்தை விதிகளால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சுமார் ஒரு மாதம் காலத்திற்கு பிறகு தற்போது, பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அங்குள்ள அலையாத்தி காடுகள் நடுவே படகு சவாரி செய்து மகிழந்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சுற்றுலா மையம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுத்தமான குடிநீர், சுத்தமான கழிவறை, உணவகம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் செய்துள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்